PHOTOS: அக்கினியுடன் சங்கமித்தது ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்


(சதீஷ்)

கடந்த 26 ஆம் திகதி மரணமான இ.தொ.க. வின் தலைவரும் அமைச்சருமான அமர்ர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் 05.15 மணியளவில் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் அக்கினியில் சங்கமமாகியது.


மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அன்னாரது பத்தரமுல்ல இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் கொழும்பு ஜயரட்ன மலர்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் இ.தொ.க வின் தலைமைக்காரியாலயம் சௌமிய
பவனில் வைக்கப்பட்டு அதனையடுத்து அவரது சொந்த ஊரான வெவண்டனுக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் நுவரெலியா, தலவாக்கலை ஊடாக கொட்டக்கலைக்கு கொண்டுவரப்பட்டு இ.தொ.க காரியாலயமான CLF
இல்வைக்கப்பட்டது.

படையினரின் பலத்த பாதுகாப்போடு இன்று பிற்பகல் கொட்டகலையிலிருந்து அட்டன் டிக்கோயா வழியாக நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டு
அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடலுக்கு பெருந்திரளான பொதுமக்கள் வீதியின் இரு மருங்கிலும் சுகாதார இடைவெளியை பேணி நின்று மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலியை செலுத்தினர்


பிரதமர் மகிந்த அஞ்சலி உரை நிகழ்த்திய பின்னர் பூதவுடலுக்கு அஞ்சலி
செலுத்தியதுடன் குடும்பத்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். பிரமுகர்களின் இரங்கல் உரையை அடுத்து அன்னாரின் பூதவுடல் அரச மரியாதையுடன் அக்னியுடன் சங்கம்மாகியது.

இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில், பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ உட்பட முக்கிய
அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி , உரை நிகழ்த்தினர்.

அமைச்சர்களாள பந்துல குணவர்தன,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கிம்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்குகூட்டணியின் சார்பாக முன்னாள் அமைச்சர்-

-வி.இராதகிருஸ்ணன், முன்னாள்அமைச்சர்களான நிமால் சிரிபால டி சில்வா ,விமல்வீரவன்ச,மஹிந்தானந்த அளுத்கமகே,ஜி.எ.பீரிஸ் ,பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்தகுமார், நவீன் திசாநாயக்க, சி.பி ரத்நாயக்க நாமல் ராஜபக்ஷ, மற்றும் மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத்ஏக்கநாயக்க, முன்னாள் மத்தியமாகாணசபை
உறுப்பினர்கள் ,பிரதேசசபை தலைவர்கள்,உறுப்பினர்கள் நுவரெலியா மாவட்ட செயலாளர் புஸ்பகுமார, உட்பட சிவனொளிபாதமலை பிரதான தேரர், மற்றும் இந்து,கிருஸ்தவ,இஸ்லாமிய மதத்தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்


,நாட்டின் ஜனாதிபதி,பிரதமர்உட்பட துயர் நிகழ்வில் பங்குகொண்ட
அனைவருக்கும் தனது குடும்பத்தினரின் சார்பாக நன்றியினை
தெரிவித்துக்கொண்டார்.














No comments: