மட்டு வாழைச்சேனையில் மோட்டர் குண்டு ஒன்று மீட்பு


(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் பாவிக்க முடியாத நிலையில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (31) திகதி மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்

வாழைச்சேனை குறிஞ்சிமலை வீதியிலுள்ள மண் கொண்டு வந்து குவிக்கப்படும் மண் யாட் பகுதியில் குறித்த மோட்டர் குண்டு ஒன்று இருப்பதாக பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விசேட அதிரடிப்படையினர் பொலிசார் சென்று பாவிக்க முடியாத மோட்டர் குண்டை மீட்டு எடுத்துச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

No comments: