பொத்துவில் கனகர் கிராம ஆசிரியர்களை ஊக்குவிக்கும் செயற்றிட்டம் முன்னெடுப்பு


(நமது நிருபர்)

பொத்துவில், பிரதேச செயலகத்திற்குட்பட்ட ,ஊரணி கிராமசேவகர் பிரிவில் உள்ள ஊறணி கனகர், கிராம  பகுதியில் அமைந்துள்ள, அறநெறி மற்றும் கல்விச் செயற்பாடுகளை, அர்ப்பணிப்புடன் இலவசமாக செயற்படுத்திவரும் ஆசிரியர்களை, ஊக்குவிக்கும் செயற்பாடனது அன்னை சிவகாமி அறக்கட்டளையினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேற் குறிப்பிடப்பட்ட  08 ஆசிரியர்களால் ,கனகர், கிராமத்தில் வசிக்கும்  125 மாணவர்களுக்கு இலவசமான அறநெறி ,கற்கை வழங்கப்பட்டு வருகின்றது  

ஆசிரியர்களுக்கு ,அன்னை சிவகாமி ,அறக்கட்டளையின் ஸ்தாபகர் மகாரூபனின்  நிதி, அனுசரனையில் ,3000 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் உலர் உணவு நிவாரணமும் வழங்கி வைக்கப்பட்டது.

 பொத்துவில் பிரதேச ,செயலாளர் ஆர். திரவியராஜ் , தலைமையில் ,நடை பெற்ற இந் நிகழ்வில் , திருக்கோவில் பிரதேச ,செயலாளர் த.கஜேந்திரன்  திருக்கோவில் பிரதேச செயலக உதவிப்பிரதேச, செயலாளர் க.சதிஸ்சேகரன்  மற்றும் ,சிரேஷ்ர, ஊடகவியலாளரும், சமூக சேவையாளருமான, வீ.ரி ,சகாதேவராஜா  மற்றும் ,திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோத்தர்கள்  மற்றும் பிரான்ஸ் வாழ் ,பாண்டிருப்பு செயற்பாட்டாளர்களான ,கண்ணன்  ,மற்றும் ஜெயராஜ் , ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.







 







No comments: